Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐந்துகிணற்று மாரியம்மன் கோவிலில் ... கோயில், வீடுகளில் வரலட்சுமி பூஜை : பெண்கள் வழிபாடு கோயில், வீடுகளில் வரலட்சுமி பூஜை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
எழுத்தின் அளவு:
மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

பதிவு செய்த நாள்

05 ஆக
2022
01:08

கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரத்தில், மகாலட்சுமி கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்த கோவிலில் தான், வினோதமான வழிபாடாக, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 9:45 மணிக்கு கோவில் பூசாரி கொடிமரத்திற்கு விளக்கு ஏற்றினார். சுவாமி உத்தரவு படி கோவில் வளாகத்தில் தேங்காய் உடைக்கும் பக்தர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். பக்தர்கள் தலையில் தேங்காயை, பூசாரி பெரியசாமி உடைத்தார். 570 பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகன், லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜோதி, ஹிந்து அறநிலைத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பஞ்சப்பட்டி வட்டார மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டாக்டர்கள் தினேஷ்குமார், ஸ்ரீஜா, ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் மருத்துவ முகாம் நடந்தது.அதுபோல, திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே, ஆண்டியபட்டி மகாலட்சுமி அம்மன், கருப்பசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் உடலில் அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar