நயினார்கோவிலில் ஆடி வெள்ளி விழா: பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 05:08
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயிலில், ஆடிப்பூர விழாவையொட்டி, பெண்கள் பாதயாத்திரையாக சென்று விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இக்கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஆக. 3 ம் தேதி காலை நாகநாத சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நயினார்கோவிலுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இதன்படி திருமண தடை உள்ளிட்ட அனைத்து வகையான தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். அப்போது திரளான பெண்கள் கொடிமரத்தின் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.