ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியலில் ரூ. 1 கோடி காணிக்கையாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட சில சன்னதியில் உள்ள உண்டியல்கள் மட்டும் திறக்கப்பட்டு கோயில் துணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். பின் கோயில் கல்யாண மண்டபத்தில் காணிக்கைகளை கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடி 31 ஆயிரத்து 838 ரூபாயும், தங்கம் 88 கிராம், வெள்ளி 2 கிலோ, 310 கிராம் காணிக்கையாக கிடைத்தது. திருட்டு : உண்டியலில் இருந்த நாணயங்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் சேகரிப்பார்கள். இதில் ஒரு பாக்கெட்டை, பெண் ஒருவர் திருடி வந்து கடையில் கொடுத்ததாக சமூக வலைதளத்தில் புகைப்படம் வைரலானது. இது உண்மையா என கோயில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.