திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிம்மம் வாகனத்தில் பச்சையம்மன் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.