விருத்தாசலம் : செங்கழனி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, கடந்த 24ம் தேதி துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.நேற்று செடல் திருவிழா நடந்தது. காலை 9:30 மணியளவில், மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து, தீச்சட்டி ஏந்தி, செடல் அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.இன்று மஞ்சள் நீர் உற்சவம், நாளை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதற்காக, பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து அம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வரும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.