பதிவு செய்த நாள்
07
ஆக
2022
08:08
தஞ்சாவூர் : கோவில் நிதியை அரசு இதர பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது, என, அகில பாரத ஹிந்து மகாசபா பொதுச்செயலர் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பல்வேறு கோவில்களில் நேற்று தரிசனம் செய்த அவர் கூறியதாவது:
கோவில்களின் நிலை, நிர்வாகம், சுவாமிகளுக்கு நடக்கும் பூஜைகள் குறித்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோவில்களை பார்வையிட்ட நிலையில், தமிழக கோவில்களை பார்வையிட்டு வருகிறேன்.கோவில்களில் நான்கு வேதங்கள், நாலாயிரம் திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் படிப்பதுக்கு ஓதுவார்கள் இல்லை. கோவில் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க வேண்டும். இத்தகைய செலவுகளுக்கு கோவில் வருமானம், நகைகள், சொத்துக்கள் கொண்டு செலவு செய்ய வேண்டும். கோவில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். கோவில் நிதியை அரசு இதர பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது.அந்தந்த பகுதி ஹிந்துக்கள், அங்குள்ள கோவில்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில், 70 ஆண்டுகளாக ஹிந்து விரோத அரசு நடந்து வருகிறது. பலவிதமான இடையூறுகள் செய்து வருகின்றனர்.
கோவில்களில் பூஜைகள் சரியாக நடப்பதில்லை.கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க, ஹிந்து இளைஞர்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மூன்று மாநில கோவில்களின் நிலைகள், தேவையான வசதிகள் குறித்து அறிக்கையாக தயார் செய்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், அந்தந்த மாநில முதல்வர்கள், அறநிலையத்துறை அமைச்சர்களிடம் விரைவில் வழங்க உள்ளோம். அதன் அடிப்படையில் மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சட்டப் போராட்டத்தை துவங்குவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.