Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் நிதியை இதர பயன்பாட்டிற்கு ... சுந்தர மூர்த்தி நாயனார் குருபூஜை பெருவிழா சுந்தர மூர்த்தி நாயனார் குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா யானைகள் இன்று புறப்பாடு விழாவுக்காக 16 கமிட்டிகள் அமைப்பு
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா யானைகள் இன்று புறப்பாடு விழாவுக்காக 16 கமிட்டிகள் அமைப்பு

பதிவு செய்த நாள்

07 ஆக
2022
08:08

பெங்களூரு-மைசூரு தசரா விழாவில் பங்கேற்பதற்கான ஒன்பது யானைகள் கொண்ட முதல் குழு, இன்று காட்டில் இருந்து புறப்படுகிறது. விழா விமரிசையாக நடக்க 16 கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, செப்டம்பர் 26ம் தேதி துவங்கி, அக்டோபர் 5ம் தேதி முடிகிறது. இறுதி நாளில் விஜயதசமியை ஒட்டி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும்.விழாவுக்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே, ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், காட்டில் இருந்து, அரண்மனைக்கு அழைத்து வரப்படும்.இதற்கான ஆலோசனை கூட்டம், மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட பொறுப்பு துறை அமைச்சர் சோமசேகர், மேயர் சுனந்தா பாலநேத்ரா, கலெக்டர் பகாதி கவுதம், போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, மாவட்ட துணை வன காப்பாளர் கரிகாலன் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இரண்டு ஆண்டுகள் போன்று, அம்பாரியை சுமந்து செல்லும் பொறுப்பு, இம்முறையும் அபிமன்யூ யானையிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து விழாவில் பங்கேற்கும் யானைகள் போஸ்டர் வெளியிடப்பட்டது.விழாவை விமரிசையாக கொண்டாடும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் 16 கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையில், இரண்டு குழுக்களாக, 14 யானைகள் காட்டில் இருந்து மைசூரு நகருக்கு புறப்படுகிறது. முதல் கட்டமாக, ஒன்பது யானைகள் ஹுன்சூர் தாலுகா, வீரனஹொசஹள்ளி கிராமத்தில் இருந்து இன்று காலை 9:01 மணியில் இருந்து 9:35 மணிக்குள் கன்னி லக்னத்தில் கஜபயணம் புறப்படுகிறது.இதற்காக மத்திகொடு யானைகள் முகாமில் இருந்து, வீரனஹொசஹள்ளி கிராமத்துக்கு யானைகள் நேற்று புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar