பதிவு செய்த நாள்
07
ஆக
2022
02:08
மன்னார்குடி அருகே, ஐந்து கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 50; விவசாயி. மாளிகைமேட்டில், தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் கட்ட, நேற்று பள்ளம் தோண்டினார். நான்கடி ஆழத்திற்கு தோண்டியபோது, கற்சிலைகள் இருப்பதை தொழிலாளர்கள் பார்த்தனர். அவற்றை எடுத்த போது, குருதட்சிணாமுர்த்தி மற்றும் சேதமடைந்த, நான்கு இதர சாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது.மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய்துறை ஊழியர்கள், சாமி சிலைகளை எடுத்துச் சென்றனர். தொல்லியல் துறையிடம், ஐந்து சிலைகளும் ஒப்படைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.