பதிவு செய்த நாள்
08
ஆக
2022
07:08
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நாளை கால்பிரவு கிராமத்தார்கள் மண்டகப்படியில் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 வருடங்களாககொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம், கமலம், யானை, கிளி, காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூப்பல்லக்கு, சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. ஆடித்தபசு ஆக.,9ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தானமேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.