திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2022 02:08
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க நேற்று பக்தர்கள் 12 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறை முடிவடைந்த பின்னும் பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளதால், வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது.தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் பக்தர்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. திருமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.நேற்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டத்தில் உள்ள 28 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். எனவே, தரிசனத்திற்கு 12 மணி நேரம் தேவைப்படுகிறது. 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 - 4 மணி நேரமும் தேவைப்படுகிறது.