அவிநாசி நாகதேவி கோவிலில் 35ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2022 02:08
அவிநாசி: அவிநாசி நாகதேவி கோவிலின் 35ம் ஆண்டு ஆடி பெருவிழாவில், பொங்கல் மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அவிநாசி சந்தை வளாகத்தில் அமைந்துள்ள நாகதேவி கோவிலின் 35ம் ஆண்டு பெருவிழாவில் கடந்த வாரம் தீர்த்தக்குடம், பாலபிஷேகம் மற்றும் அக்னி எடுக்கும் திருவிழாவுடன் நடைபெற்றது .இதனை முன்னிட்டு கடந்த மாதம் 22ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கிய ஆடி பெருவிழா வியாழன் அன்று அக்னி சட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியில் 50ம் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும், படைக்களம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பால் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பாலபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகதேவி அம்மனுக்கு காளி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருவிழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.