Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணல்வெளி வாகனங்கள்
முதல் பக்கம் » ஸ்ரீரங்கம் கோயிலின் சிறப்புகள்
திருவடிச்சாயல்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
03:08

வைணவத்தில், பெருமாளை தரிசிக்கும்போது பாதத்தில் துவங்கி திருமுக மண்டலத்தை தரிசிப்பது மரபு. அதிலும் பெருமாளின் திருவடிகளுக்கு தனிப்பெருமை உண்டு. இன்றும் பெருமாள் கோயிலில் திருவடி சேவைக்கே உயர் முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் கருவறை சுவரிலிருந்து, அடுத்தடுத்த பிரகாரங்கள் ஒவ்வொன்றிலும், கருவறையில் திருவடி இருக்கும் இடத்தைகுறிப்பால் உணர்த்தும் வகையில், திருவடிச்சாயல்கள் எனப்படும் பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் கோயில் முதல் பிரகாரத்தில் ஸ்ரீரங்கவிமானத்தின் சுவற்றில் தங்கத்தால் ஆன திருவடிகள் பதிக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ள ராஜமகேந்திரன் திருச்சுற்றில் சேனை முதலியார் சன்னிக்கு எதிரில் சிறியதொரு நான்குகால் மண்டபத்தில் பித்தளை தகடுகள் போர்த்திய திருவடிச்சாயல்களை நாம் சேவிக்கலாம். மூன்றாம் பிரகாரம் எனப்படும் குலசேகரன் திருச்சுற்றில் மடைப்பள்ளி அருகே கல்லினால் ஆன திருவடிச்சாயலை சேவிக்கலாம், நான்காம் பிரகாரத்தில் மணல்வெளியில் சிறிய மண்டபத்திலும், ஐந்தாம் பிராகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகிலும், ஆறாம் பிரகாரம் எனப்படும் உத்தரவீதியில் யானைக்கூடம் அருகிலும் திருவடிச்சாயலை நாம் சேவிக்கலாம். இந்த திருவடிச் சாயல்கள் ஸ்ரீரங்கத்திற்கு கிழக்கே சுமார் 40 மைல் தூரம்வரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்ததாகவும், அவை காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் ‘காணாமல்’போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 
மேலும் ஸ்ரீரங்கம் கோயிலின் சிறப்புகள் »
temple news
ஸ்ரீரங்கம் பெரியபெருமாளின் கருவறையில் உற்சவர் நம்பெருமாளின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி,பூமாதேவி ... மேலும்
 
temple news
உற்சவர் அழகிய மணவாளன் வெளிமாநிலத்திற்குச் சென்றிருந்த காலத்தில், அவர் எங்கிருக்கிறார் என்பது ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் பெரியகோயில் உற்சவர் சுமார் 2 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். பஞ்சலோகத்திலான இந்த ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் கோயில் மூலவர் பெரியபெருமாள் ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். சுண்ணாம்புக்காரை ... மேலும்
 
temple news
இக்கோயில் தாயார் படிதாண்டா பத்தினியாவார், இவர் எக்காலத்திலும் சன்னதி ஆரியப்படாள் வாசலை விட்டு வெளியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar