நகரி: அங்காள அம்மன் கோவிலில், இரண்டாவது ஆண்டாக ஆடி ஞாயிறில், 108 பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, கீளப்பட்டு கிராமத்தில் உள்ள அங்காள அம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி இரண்டாவது ஆண்டாக ஞாயிறில், 108 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், காலை 9:30 மணிக்கு, 108 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.