நரிக்குடி : நரிக்குடி அருகே உள்ள கண்மாயில் சிதைந்த நிலையில் பழமையான 6 கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நரிக்குடி விடத்தக்குளம் பெரிய கண்மாயில் இளைஞர்கள் சிலைகளின் உடைந்த பாகங்களை கண்டனர். மேலும் தேடிய போது ஏராளமான பழங்கால சிலைகள் கிடைத்தது.தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிராமத்தினரும் சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 அடி உயர தலையில்லாத அம்மன் சிலை, ஒன்றையடி உயர கருப்பணசாமி சிலை, ஒன்றை அடி உயர அம்மன் சிலை, 2 அடி உயர நாகர் சிலைகள் எடுக்கப்பட்டன. இவை திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்ப்படும் என தாசில்தார் சிவக்குமார் தெரிவித்தார்.