மழையால் சதுரகிரி செல்ல ஆக.,12 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2022 08:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் தொடரும் சாரல் மழையினால், ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.
இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆடி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும் கடைசி இரு நாட்கள் கோயில் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட்டு, பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரம் திரும்புவதில் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில் தற்போது வரை சதுரகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து, ஓடைகளில் நீர் வரத்து இருப்பதால் இம்மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.