மயிலம் மலை மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2022 08:08
மயிலம் : மயிலம் மலை மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா நடந்தது.மயிலம் மலையடிவாரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 6ம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.