பதிவு செய்த நாள்
09
ஆக
2022
10:08
செஞ்சி: பொற்குணம் பொன்னியம்மன் கோவிலில் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
மேல்மலையனுார் அருகே உள்ள பொற்குணம் பொன்னியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து வரும் 11ம் தேதி ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷகம் செய்ய உள்ளனர். இதை முன்னிட்டு நாளை (10ம் தேதி) காலை 9 மணிக்கு கணபதி பூஜையும், மாலை 6 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷா பந்தனம், கலச ஆவாஹனம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடக்க உள்ளன. 11ம் தேதி காலை 6 மணிக்கு கோபூஜை, மூலமந்திர ஹோமம், தம்பதி பூஜை, சங்கல்பம் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 8.30 மணிக்கு மகா கும்பாபிஷகமும், 9.30 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.