Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பணார் கோவிலில் அறுத்த கோழி ... ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோதண்டராமர் கோவிலில் கிணற்றில் தூர்வரும் பணி துரிதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2012
11:08

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் கருவறைக்கு அருகே தூர்ந்து போய் இருந்த கிணற்றில் தூர்வரும் பணி நடந்து வருகிறது.செஞ்சி நகரில் சங்கராபரணி ஆற்றங்கரையில் ஐநூறு ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறைக்கு பின்புறம் இடது பக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்று அடி அகலத்தில் தொட்டி போன்ற அமைப்பு காணப்பட்டது. நாளடைவில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டியதால் இது தூர்ந்து போனது. வழிபாடு இல்லாமல் இருந்த கோதண்டராமர் கோவிலில் கடந்த சில ஆண் டுகளாக ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து பொது மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மூலவருக்கு அபிஷேகம் செய்ய சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
கோவில் சிதிலமடைவதற்கு முன்புவரை அபிஷேகத்திற்காக கோவிலின் உள்ளேயே கிணறு இருந்திருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதனடிப்படையில், கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிறுவனர் ரங்க ராமானுஜ தாசர் மேற்பார்வையில் இங்கிருந்த தொட்டி போன்ற அமைப்பை தூர்வாரி வருகின்றனர். ஒரு மாதமாக நடந்து வரும் இப்பணியில் தற்போது 20 அடி ஆழம் வரையில் தூர் வாரி உள்ளனர். ஆற்றுக்கு மிக அருகில் இருப்பதால் தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. செஞ்சி கோட்டை வெங் கட்ரமணர் கோவிலில் உள்ள பாதாள சுரங்கம் போன்றே தற்போது தூர் எடுக்கப்படும் கிணறும் உள்ளது. ஒரே காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் தற்போது தூர்வாரி வரும் பகுதி கிணறா அல்லது பொங்கிஷங்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ரகசிய சுரங்கமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவில் வளாகத்தில் வேறு இடங்களில் கிணறு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar