கும்பகோணத்தில் வரும் 15ம் தேதி சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2022 04:08
கும்பகோணம்: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ம் தேதி கும்பகோணம், போர்ட்டர் டவுன்ஹாலில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு, 13ம் தேதி காலை 8.30 மணிக்கு சுவாமி விவேகானந்த விஜய ஜோதி ஓட்டம், கும்பகோணம், ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி பிரதான சாலை வழியாக போர்ட்டர் டவுன்ஹால் வந்தடைகிறது. இதில் 125 விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகின்றனர். 14ம்தேதி காலை 8.00 மணிக்கு மாணவ, மாணவிகள் பங்குபெறும் ஊர்வலம் நடைபெறுகிறது. 15ம் தேதி கும்பகோணம், போர்ட்டர் டவுன்ஹாலில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் 15ம் தேதி மாலை 6.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களில் சிறப்பு பஜனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் செய்துள்ளார்.