ஊட்டி: மழை பெய்ய வேண்டி ஊட்டி பூவையர் சங்கம் சார்பில், சிறப்பு பாமாலை பூஜை நடந்தது. மழை வேண்டி ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில், பூவையர் சங்கத்தின் சார்பில், சிறப்பு பாமாலை பூஜை, ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் நிகழ்ச்சி நடந்தது. குன்னூர் மணியின் ஆர்மோனியம், ஊட்டி சீனிவாசனின் மிருதங்கம் ஆகியவற்றுடன் பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், பிரசாத விநியோகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பூவையர் சங்கத்தினர் மேற்கொண்டனர்.