போடி: ஆடி வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மலர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* போடி தாய்ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி குலாலர் பாளையம் காளியம்மன், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. எலுமிச்சம்பழம் தீபம் இட்டு வழிபட்டனர்.