திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம் நடந்தது.
திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் ஆலயத்தில் சுவாமிகளின் ஆராதனை விழா இன்று காலை துவங்கியது. 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம், ஹரிவாயுஸ்துதி பாராயணம் நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மாலை ஸ்வஸ்தி வாகனம், மங்கள ஆரத்தி நடந்தது. கோவில் நிர்வாகி கோபி மற்றும் விழா குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.