சேவுகபெருமாள் அய்யணார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2022 02:08
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி சேவுகபெருமாள் அய்யணார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் 21 நாள் விரதமிருந்தனர். நேற்று குதிரை பொட்டலில் இருந்து கிராமத்துக்கு சொந்தமான மற்றும் நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் புரவிகளை மந்தை திடலுக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று(ஆக.15) மந்தை திடலில் இருந்து புரவிகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் கிடா வெட்டி பொங்கல், மாவிளக்கு வைத்து சாமி கும்பிட உள்ளனர். இவ் விழாவில் கருங்காலக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.