ரூ.14 லட்சத்தில் புதுப்பித்த தேர் ஷெட் இன்றி வீணாகும் அவலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2012 10:08
பெண்ணாடம்: பதினைந்து ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்ட பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் தேர் எவ்வித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நிற்பதால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் உடனுறை அழகிய காதலியம்மன் கோவில் திருத்தேர் பராமரிப்பின்றி 15 ஆண்டுகளுக்கு முன் பாழாகி நின்றது. பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கையையேற்று தேரை சீரமைக்க தமிழக அரசு 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. தேர் சீரமைக்கப்பட்டு, மே மாதம் 3ம் தேதி நடந்த பிரளயகாலேஸ்வரர் கோவில் திருவிழாவில் தேர் உற்சவம் நடந்தது. திருவிழா முடிந்து தேர் எவ்வித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தேர் பாழாகி வருகிறது. ஏற்கனவே இதுபோன்று திறந்த வெளியில் நிறுத்தி வைத்து சேதமடைந்த தேரை 14 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து மீண்டும் திறந்த வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேரை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க கோவில் முன் "ஷெட் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.