அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில், இன்றும், நாளையும், கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. அன்னூர் ஸ்ரீ தேவி பூ தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 76ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று துவங்குகிறது. இன்று இரவு 7:00 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளின் தாலாட்டு வைபவம் நடைபெறுகிறது. நாளை (19ம் தேதி) காலை 9:00 மணிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. இரவு அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பிருந்தாவன நடனத்துடன் பஜனை நள்ளிரவு வரை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு உரியடித்தலும், இரவு 10:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் வைபவமும் நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத கிருஷ்ண ஜெயந்தி விழா இந்த ஆண்டு கூடுதல் நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது.