தேவகோட்டை: தேவகோட்டையில் உள்ள ராமாயண ராமர் கோவிலில் வேதவேள்வி ஆராதனை, இலவச மருத்துவ முகாம், திருமுறை பாராயணம், உட்பட ஏழு விழாக்கள் நடந்தது. ஜமீன்தார் சோமநாராயணன் தலைமை வகித்தார். அருசோமசுந்தரன் முன்னிலை வகித்தார். சேவுகன் அண்ணாமலை வரவேற்றார். காசிநாதன், சிதம்பரம், பேசினர். 20 பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. டாக்டர் சுப்பிரமணியன் இலவச மருத்துவ முகாம் நடத்தினர். பேராசிரியர் சுப்பையா குழுவினர் சுந்தரர் தேவாரம் பாராயணம் செய்தனர். ராமாயண ராமருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து பாராயணத்திலும் பாடினர்.