பதிவு செய்த நாள்
18
ஆக
2022
04:08
பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், இன்று அதிகாலை 3.00 மணிக்கு நிர்மல்ய தரிசனத்துடன் விழா துவங்கியது. 7:00 மணிக்கு, செண்டை மேல வாத்தியங்கள் முழங்க யானைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. காலை 9:00 மணியளவில், கிருஷ்ணன் வேடமணிந்த, ஏராளமான சிறுவர், சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், மம்மியூர் கோவில் சன்னிதியில் இருந்து புறப்பட்டு, மதியம், கிருஷ்ணா கோவிலை அடைந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள், மேல்சாந்தி கிருஷ்ணசந்திரன் நம்பூதிரியின் தலைமையில் நடந்தன. தவிர, பாலக்காடு அடுத்துள்ள, குன்னத்தூர்மேடு ஸ்ரீ கிருஷ்ணர், சின்மயா தபோவன குருவாயூரப்பன் கோவில்களில் விழா கொண்டாடப்பட்டது. குன்னத்தூர்மேடு ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின், கிருஷ்ணரின் தங்கச் சிலை, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து யானைகளின் அணிவகுப்பு, கஜபூஜை, யானைகளுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியான "யானையூட்டி" ஆகியவை நடைபெற்றது. தாழ்ச்சீவேலி, கிருஷ்ணர் ஜனன பூஜை, யானைகளின் அணிவகுப்பு ஆகியவை நடந்தன. சின்மயா தபோவன குருவாயூரப்பன் கோவிலில் அலங்கார பூஜை, பஜனை, கதகளி, ஸ்ரீ கிருஷ்ணா அவதார பாராயணம், அபிஷேகம், அகண்டநாம ஜபம் ஆகியவை விழாவையொட்டி நடந்தன.