செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2022 12:08
புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் நடந்த தேரோட்டத்தில், திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின் அம்மன் தேரில் எழந்தருள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர், இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.