மதுரை: நாடு முழுவதும் கோகுலாஷ்டமி கோலாகல கொண்டாடப்பட்டு வருகிறது.
கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றோம். அன்றைய தினத்தில் வீட்டில் கிருஷ்ண வழிபாட்டை முன்னிட்டு மலர்கள், தேங்காய், பழங்கள் தவிர கண்ணனுக்கு பிடித்தமான பலகாரத்தை செய்து படையல் இடுவது வழக்கம். இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை பீளமேடு கொடிசியா ரோட்டில் உள்ள இஸ்கான் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு கிருஷ்ணர் அருள்பாலித்தார். உடுமலை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலித்தார்.