Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழியில் 3 கோவில்களின் ... சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்: தருமை ஆதீனம் தரிசனம் சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

22 ஆக
2022
07:08

நாகர்கோவில்,  இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஆவணி ஞாயிறு நாளில் நாகருக்கு பால் ஊற்றி வழிபட பக்தர்கள் அலைமோதினர். நாகர் பிரதிஷ்டையை மூலவராக கொண்ட நாகர்கோவில் நாகராஜாகோயில் பிரசித்தி பெற்றதாகும். மூலஸ்தானம் இன்னும் ஓலை கூரையின் கீழ் உள்ளது. இங்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினால் நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், சரும நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆயில்யம் நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதுபோல ஆவணி ஞாயிறு நாளில் இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்களே பால் ஊற்றி வழிபாடு நடத்துவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் இந்த வழிபாடு தடை செய்யப்பட்டிருந்தது. முதல் ஞாயிறான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்தது முதல் பக்தர்கள் நீண்ட கியூ காணப்பட்டது. கோயிலின் வெளிப்புறம் உள்ள நாகர்சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றிய பின்னர் கோயிலின் உட்பிரகாரத்தில் நாகர் பிரதிஷ்டையில் அர்ச்சனை நடத்தியும், பால் பாயாசம் வழிபாடு நடத்தியும் வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 12:00 மணிக்கு பதிலாக பகல் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 26 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 
temple news
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு ... மேலும்
 
temple news
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar