Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் ... சிறுவாபுரியில் அரோகரா கோஷத்துடன் கும்பாபிஷேகம், திருக்கல்யாணம் கோலாகலம் சிறுவாபுரியில் அரோகரா கோஷத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்: தருமை ஆதீனம் தரிசனம்
எழுத்தின் அளவு:
சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்: தருமை ஆதீனம் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2022
07:08

மயிலாடுதுறை: சீர்காழியில் இன்று காலை நடைபெற்ற சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகத்தில் தருமை ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தேவாரம் பாடல் பெற்ற ஸ்ரீ சட்டநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் சட்டநாதருக்கு எதிரே அஷ்ட பைரவர்கள் சன்னதி அமைந்துள்ளது.  இதன் ஒரு பாகமாக வயிரவன் கோடி என்று அழைக்கப்படும் இடத்தில் பைரவர்களில் ஒருவரான சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் அமைந்துள்ளது. இதனால் காசிக்கு இணையான பைரவர்  ஷேத்திரமாக சீர்காழி விளங்கி வருகிறது.   தடையின்றி நாள் தோறும் இந்த சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால்  வியாபாரம் பெருகி செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் காலையில் இந்த பைரவரை வணங்கி சென்று வியாபாரத்தை தொடங்குவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி பூர்வாங்க பூஜையும், 20ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. சரியாக காலை 7 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 7:15 மணிக்கு சுவாமிக்கு, அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் தருமை ஆதீன கட்டளைத் தம்பிரான்கள், வர்த்தக சங்கத் தலைவர் எஸ்கேஆர்.சிவசுப்பிரமணியன்,  தொழிலதிபர் கியான் சந்த், டாக்டர் முத்துக்குமார்  மற்றும் வர்த்தகர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ஆடிப்பூரம் நிறைவு விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  சிவகங்கை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிபூரம் திருவிழா யொட்டி அம்மனுக்கு மகா தீபாரதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar