ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் ஸ்ரீ ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (21ம் தேதி) காலை9.15 மணி புறப்பாடு, ஸ்ரீ பண்டாரம் ஆஸ்தான மண்டபத்தில் 9.45am எழுந்தருளி திருமஞ்சனம் காலை 11.30மணி கண்டருளினார். மாலை 5 மணி வரை பொது ஜன சேவை, மாலை 6-30 மணிக்கே அரவணை பிரசாதம் அமுது செய்து வழிபட்டனர். இன்று (22ம் தேதி) உறியடி உற்சவம் காலை 7 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் புறப்பாடு கண்டருளி எண்ணெய் விளையாட்டுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதிக்கு 9 மணியளவில் வந்தடைவார். மதியம் 3 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சிமார்களோடு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் உடன் வர புறப்பட்டு திருமஞ்சன காவிரி அருகில் உள்ள யாதவ உறியடி மண்டபம் எழுந்தருள்வார். மண்டபத்தில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8-15 மணிக்கு பாதாள கிருஷ்ணர் மண்டபத்தில் உறியடி உற்சவம் நடைபெறும்.