சூலூர்: கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் பழமையானது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா, நேற்று முன்தினம் நடந்தது.
கடந்த, 19 ம்தேதி காலை 8:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு, கோ பூஜையுடன் கல்யாண உற்சவ விழா துவங்கியது. தொடர்ந்து பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்கார பூஜை நடந்தது. 9:15 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மாலை நடந்த உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இரவு, 7:30 மணிக்கு நாம சங்கீர்த்தத்துடன், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.