தலைஞாயிறு குற்றம் பொருத்த நாதர் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2022 08:08
தலைஞாயிறு கோல்வளை நாயகி உடனாகிய குற்றம் பொருத்த நாதர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோவில், வைத்தியநாத சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு) ஸ்ரீ கோல்வளை நாயகி உடனாகிய குற்றம் பொருத்த நாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 22.08.2022 திங்கட்கிழமை, ஏகாதசி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய இன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கன்னியா லக்னத்தில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்..