காஞ்சி விருட்ச விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2022 08:08
காஞ்சிபுரம் : உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட தேவகுரு என அழைக்கப் படும் பிரகஸ்பதி குரு பகவான் கோவிலில் மண்டலா பிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த உக்கம்பெரும் பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு தனித்தனி சன்னிதி உள்ளது.இங்கு, தேவகுரு என அழைக்கப்படும் பிரகஸ்பதி குருபகவான், தன் மனைவி தாரையுடன் தம்பதி சமேதராய், யானை வாகனத்தில் அமர்ந்திருப்பதுபோல சிலை நிறுவப்பட்டு, நுாதன விமானத்துடன், ஆகம விதிப்படி புதிதாக தனி கோவில் கட்டப்பட்டு ஜூன் 30ல் கும்பாஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினமும் மண்டலாஷேகம் நடந்து வந்தது. 48 வது நாளான நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், கலசாபி ஷேகம், பிரகஸ்பதி குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.