பதிவு செய்த நாள்
23
ஆக
2022
08:08
அழகியமண்டபம்: வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் புனர் நிர்மான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், ஊர் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராமசந்திரன், பொது செயலாளர் துரைமணி, கலை செல்வன், அன்னை பராசக்தி கல்வி அறக்கட்டளை தலைவர் பால்ராஜ், விவேகானந்த மெட்ரிக் பள்ளி தாளாளர் அழகிவிஜி, செயலாளர் மனோகரன்
தலைமை வகித்தனர். குமாரகோவில் சின்மயாமிஷன் சுவாமிகள், யோகி சூரத் சுவாமிகள், தங்கலட்சுமி, அன்புமதி, தக்கலை சித்தாடாக்டர் மகேஸ்வரி, பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி மிசா சோமன் , பா.ஜ., மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார், பி.பி.கே.சிந்து குமார் முன்னிலை வகித்தனர். வேத மந்திரங்கள் முழங்க அடிக்கல் நாட்டப்பட்ட து. நிகழ்ச்சியில், அன்னை சாரதா தேவி மகளிர் மன்ற தலைவர் சசிகலா கணேசன் , மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். பின்னர், காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.