பதிவு செய்த நாள்
23
ஆக
2022
08:08
சுரண்டை: சுரண்டை வீரபாண்டீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. சுரண்டை சிவகாமசுந்தரி அம்பிகா சமேத வீரபாண்டீஸ்வரர் கோயில் திருவிழா நேற்று
கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சங்கரன்கோவில் ஏ.வி.கே., கல்வி குழுமதலைவர் அய்யாத்துரை பாண்டியன், அல்லிராணி அய்யாத்துரை பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மண்டகபடிதாரர்கள், அறங்காவல் குழு மதுஸ்ரீ, முருகையா, அழகு சுந்தரம், சுந்தரகுமார், ஹரிராம், அருணா, ஊத்துமலை ஜமீன் குமரேச ராஜா, அய்யாத்துரை பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, செயலாளர் சரவண பாபு, பொருளாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் மாரியப்பன், தில்லைபேச்சிமுத்து, பூலோகராஜ் மற்றும் பாலமுருகன், பசும்பொன், சுபிக்சா பிரஸ் கருப்பசாமி, ஆனந்த், அருணாச்சலம், ராஜா, செல்வராஜ், சுபாஷ், அருண், மாரியப்பன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.