Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை தேவஸ்தானம் ஆர்ஜித சேவா ... சங்கரநாராயண சுவாமி கோயிலில் பாலாலயம் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெட்டியார்சத்திரத்தில் வழுக்கு மரம் ஏறும் விழா
எழுத்தின் அளவு:
ரெட்டியார்சத்திரத்தில் வழுக்கு மரம் ஏறும் விழா

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
10:08

ரெட்டியார்சத்திரம்: கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜயந்தி விழாவில், ஏராளமான இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறினர்.

ரெட்டியார்சத்திரம் அருகே மலைக்குன்றில் பிரசித்தி பெற்ற கோபிநாத சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், வழுக்கு மரம் ஏறுதல், உறியடி திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, ஆக. 20ல் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. மலைக்கோயிலில் இறந்து இறங்கிய உற்சவர், காமாட்சிபுரம், எல்லைப்பட்டி, கொத்தப்புள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் திருக்கண் எழுந்தருளல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான உறியடி திருவிழா, நேற்று நடந்தது. முன்னதாக ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயில் முன்பு, 40 அடி உயர வழுக்கு மரம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் ஊன்றுதல் நடந்தது. ரதத்தில் எழுந்தருளிய உற்சவர் கோபிநாதரின் அனுமதி பெறலை தொடர்ந்து, வழுக்கு மரம் ஏறுதல் துவங்கியது. வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் ஏறினர். 2 மணிநேர முயற்சிக்குப் பின், சடையாண்டி 25, உச்சியில் இருந்த பரிசு முடிச்சை அவிழ்த்தார். இதனைத் தொடர்ந்து உறியடி திருவிழா நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar