Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 52 ... ரமலான் சிந்தனைகள்: பொறுமையின் பெருமை! ரமலான் சிந்தனைகள்: பொறுமையின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருசெந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஆக
2012
11:08

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.49 லட்சம் செலவில் கிரிப்பிரகாரத்தின் கீழ்ப்பகுதியில் கடற்கரை ஓரம் பக்தர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து கடல் அழகை ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். குழந்தைகளின் பாதுகாப்புக்காக இங்கு கடற்கரையோரம் அமரும் இடத்தில் தடுப்புக்காக கம்பிகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து ரசிக்கலாம். மேலும் மின்விளக்குகள், அலங்கார நடைபாதை ஆகியவையுடன் இந்த இடம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ள இந்த இடம் பக்தர்களுக்கு மிகவும் வசதியாகவும் இருக்கிறது. ரூ.99 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் கூடம் விரைவில் கட்டப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளது. ரூ.53 லட்சம் செலவில் சுற்றுலா பஸ் ஸ்டாப் அருகே பக்தர்கள் பயன்பாட்டுக்காக 24 அறைகள் கட்டப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் செலவில் நவீன முடிகாணிக்கை கூடம் கட்டப்பட்டு உள்ளது. கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை மாத த்தை விட இந்த ஆண்டு ஜூ லை மாதம் உண்டியல் வருமானம் ரூ.6 லட்சத்து 28 ஆயிரத்து 700ம், விடுதி கட்டணம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 758ம், கட்டண சீட்டுகள் மூலம் ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்து 20ம் அதிகரித்து உள்ளது. மொத்தம் ரூ.16 லட்சத்து 40 ஆயிரத்து 478ம் வருவாய் அதிகரித்து இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலு க்கு நாளுக்கு நாள் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இரு க்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வசதிகளும் தொடர்ந்து செய்யப்பட் டு வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிமுறை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் கூ றினார். கோயில் இணை ஆ ணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar