பதிவு செய்த நாள்
25
ஆக
2022
11:08
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 88 லட்சத்து 92 ஆயிரத்து 464 ரூபாய் உண்டியல் காணிக்கை இருந்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், ஆடி மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. ஹிந்து ச மய அறநிலையத்துறை உதவி ஆணையாளர்கள் மேல்மலையனுார் ஜீவானந்தம், விழுப்புரம் விஜயராணி, கள்ளக்குறிச்சி சிவாகரன், செயல் அலுவலர்கள் சிவக்குமார், சூரியநாராயணன், கார்த்திகேயன், செஞ்சி ஆய்வாளர் சங்கீதா முன்னிலையில் கோவில் வ ளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், 88 லட்சத்து 92 ஆயிரத்து 464 ரூபாயும், 367 கிராம் தங்க நகைகள், 845 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக இருந்தன. இப்பணியின் போது, அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், ச ரவணன், வடிவேல் உடனிருந்தனர்.