பதிவு செய்த நாள்
25
ஆக
2022
02:08
தமிழகத்தில் தொன்மையான 86 கோவில்களில் திருப்பணியை துவக்க, வல்லுனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான, மாநில அளவிலான 37 வது வல்லுனர் குழு கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஹிந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில், சேலம் மாவட்டம், சங்ககிரி சிதம்பரேஸ்வரர், மேட்டூர் பத்ரகாளியம்மன்; நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சொரிமுத்து அய்யனார்; மதுரை மாவட்டம், பொறியாளர்நகர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விளாங்குடி பாரமுருகன் உள்ளிட்ட 86 கோவில்களில் திருப்பணிகளை துவக்க, வல்லுனர் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதையடுத்து, கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவக்கப்படும்.இக்கூட்டத்தில், இணை கமிஷனர் ஜெயராமன், ஆகம வல்லுனர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் துவங்க, மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.