சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது.
ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா முடிந்த நிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோயில் ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ரொக்கமாக உண்டியலில் 76 லட்சத்து 62 ஆயிரத்து 888 ரூபாயும் தங்கம் 176 கிராம், வெள்ளி 822 கிராம், காணிக்கையாக செலுத்தியிருந்தனர். விருதுநகர் உதவி ஆணையர் வளர்மதி, கோயில் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை அறங்காவலர் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.