ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 07:00 மணிக்கு தாணிப்பாறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். மதியம் ஒரு மணி வரை ஆயிரம் பேர் மலையேறினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை, கோயில் பூசாரிகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீஸ், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.