பதிவு செய்த நாள்
25
ஆக
2022
02:08
மேட்டுப்பாளையம்: தேவனாபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காரமடை அடுத்த தேவனாபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடித்தபின்பு, கும்பாபிஷேகம் விழா துவங்கியது.
வனபத்ரகாளியம்மன் கோவில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, கோவிலை சுற்றி சுத்தம் செய்து, விழாவை தொடங்கினர். கோமாதா பூஜை செய்து, மாகாளியம்மன் கோவிலில் இருந்து, முளைப்பாரி, தீர்த்தக் குடங்களை, முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். முதல் கால யாக பூஜை, தீபலட்சுமி வழிபாடு ஆகியவை செய்யப்பட்டன. பின்பு மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் செய்து, கோபுரத்தில் கலசம் வைத்தனர். பின்பு எந்திர பிரதிஷ்டையும், மூலமூர்த்தி பிரதிஷ்டை, பரிவார மூர்த்திகளுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை இரண்டாம் யாக பூஜையுடன், நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதியை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி எடுத்து வந்து, கோபுர கலசத்தின் மீதும், சுவாமிகள் மீதும் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். பின்பு பக்தர்கள் மீது புனிதத் திட்டத்தை தெளித்தனர். இவ்விழாவில் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.