மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதியும் உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பால், தயிர், நெய், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி, அரிசி மாவு மற்றும் மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.