Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் மூன்று நாட்கள் ... இலங்கை, நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம் இலங்கை, நல்லூர் கந்தசுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் குருக்கள் மாற்றம்
எழுத்தின் அளவு:
அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் குருக்கள் மாற்றம்

பதிவு செய்த நாள்

25 ஆக
2022
05:08

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்யநாதஸ்வரர் கோவில் குருக்கள் பிரச்சனையில் திடீர் திருப்பமாக புதிய குருக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரகண்டநல்லூர் அதுல்யநாதீஸ்வரர் கோவில் ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். ரமணர் உள்ளிட்ட மகான்கள் வருகை புரிந்த பழமையான இத்தலம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை ரமணாஸ்ரம நிர்வாகத்தால் புதுப்பிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக காசிவிஸ்வநாத குருக்கள் பூஜை செய்து வருகிறார்.

அரகண்டநல்லூர் நகர் பகுதியை சேர்ந்த பலரும் இக்குருக்களின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்து மாற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தனர். இதற்கு காசிவிஸ்வநாதர் குருக்கள் பதில் விளக்கம் அளித்து இருந்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்தனர். இதில் குருக்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இன்று கோவிலைத் திறந்து வேறு குருக்களிடம் பூஜை பணிகளை ஒப்படைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசாரின் பாதுகாப்புடன் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜய ராணி தலைமையில், ஆய்வாளர் பாலமுருகன், செயல்அலுவலர் அருள், தனி வட்டாட்சியர் ஆலய நிர்வாகம் ஞானம் உள்ளிட்டோர் கோவிலை திறக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காசிவிஸ்வநாதன் கோவில் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் குருக்கள் பரணி (எ) நடராஜன் கூடுதல் பொறுப்பு அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பூஜைகள் செய்தார். குருக்கள் மாற்றப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்த அதே நிலையில் அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் கோவில் வளாகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சென்னை; திருப்பதி பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar