ஏகாட்சர மகா கணபதி கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2022 08:08
கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஸ்ரீ ஏகாட்சர மகா கணபதி கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.பின் மேள தாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. சங்கர் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தனர். அதன்பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர பொதுச்செயலாளர் பானுதாஸ், துணைத் தலைவர் அனுமந்தராவ், நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன், விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்ம நாபன், மற்றும் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 18 கால யாகசாலை பூஜை தொடங்கியது. திருவிழா வருகிற 31-ந்தேதி வரை10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் காலையில் யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை போன்றவை களும் நடக்கிறது. 7-ம் திருவிழாவான 28-ந் தேதி காலையில் 108 கலச அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.