Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாட்சர மகா கணபதி கோவிலில் ... விநாயகர் சதுர்த்தி விழா: விருத்தாசலம் சித்தி விநாயகர் வீதியுலா விநாயகர் சதுர்த்தி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தளத்தில் ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா: பிரம்மாண்ட ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பந்தளத்தில் ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா: பிரம்மாண்ட ஏற்பாடு

பதிவு செய்த நாள்

26 ஆக
2022
08:08

திருச்சி: கேரள மாநிலம் பந்தளத்தில் வரும் 29-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் ஹரிவராசனம் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஹரிவராசனம் என்ற பாடல் 1923-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த கோனகத்து ஜானகியம்மாள் என்பவர் இயற்றி பாடினார். இன்றளவும் இந்த பாடல் சபரிமலை கோவிலில் தொடர்ந்து ஒலித்து வருகிறது.

கடந்த 1954-ம் ஆண்டு பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பாடிய இந்த பாடல் உலக அளவில் அய்யப்ப பக்தர்களிடம் பிரசித்தி பெற்றுள்ளது. பாடல் இயற்றப்பட்ட நுாறாவது ஆண்டை கொண்டாடும் வகையில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா வரும் 29-ம் தேதி பந்தளத்தில் நடக்கிறது. ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா கமிட்டி சர்வதேச தலைவராக சினிமா இசையமைப்பாளர் இளையராஜா தென்தமிழக கமிட்டி தலைவராக திருச்சி, வேலுார் பதிப்பு தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர்.ராமசுப்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வரும் 29-ம் தேதி காலை 6 மணி முதல் பந்தளத்தில் பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் தென்தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென்தமிழக கமிட்டி தலைவர் ஆர்.ராமசுப்பு தலைமையில் கலந்து கொள்கின்றனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தேவராட்டம், சிலம்பாட்டம், நாதஸ்வரம், சிவ வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க பாரம்பரிய இசைக்கலைஞர்களுடன் மாபெரும் ஊர்வலம் நடக்கிறது. இதை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். பந்தளராஜா சசிகுமாரவர்மா தலைமை வகிக்கிறார். ஊர்வலம் முடிந்ததும் மாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரபல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar