Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகரம் முத்தாலம்மன் கோயில் ... நெல்லையப்பர் கோயிலில் ஆவணி கொடியேற்றம் நெல்லையப்பர் கோயிலில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
எழுத்தின் அளவு:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

பதிவு செய்த நாள்

27 ஆக
2022
10:08

தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 8 வது நாளான நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.


இதையொட்டி மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 4.30 மணிக்கு கலிவேட்டைக்கு அய்யா புறப்படும் நிகழ்ச்சியும் நடந்தது. 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருக்கதலைமைப்பதியில் சிறிய தெரு மற்றும் நான்கு ரத வீதிகளையும் வாகனம் சுற்றி வந்தது. இரவு 7 மணிக்கு குதிரைவாகனம் பிரசித்தி பெற்ற முத்திரி கிணற்றங்கரைக்கு வந்தது. அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. கலி வேட்டையாடும் பணிவிடைகளை குருபால ஜனாதிபதி நிகழ்த்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஆனந்த் ஆகியோர் வாகன பவனி பணிவிடைகளை செய்திருந்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் பக்தர்களுக்கு திருப்பதம் வழங்கி சுற்றுப்பகுதி ஊர்களான செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை , கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தே ரிவிளை, காமராஜபுரம் வழியாக வாகன பவனி வந்தது. அப்போது கிராம மக்கள் அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து

வழிபட்டனர். கலி வேட்டை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை , துாத்துக்குடி, சென்னை மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar