Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழனியப்பபுரத்தில் முத்தாரம்மன் ... உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு திருக்கல்யாணம். நாளை தேரோட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி 2வது ஞாயிறு : நாகராஜாவிற்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆவணி 2வது ஞாயிறு : நாகராஜாவிற்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
11:08

நாகர்கோவில்: ஆவணி இரண்டாவது ஞாயிற்றுகிழமையை யொட்டி, நேற்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் நாகதோஷத்தை தீர்க்கும் முக்கிய தலங்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜ கோயில். ஜாதக அடிப்படையில் ராகு, கேது தோஷம், திருமண தடை, குழந்தை பேறு இன்மை ஆகியன காரணமாக பாதிக்கபடுவோருக்கு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனம் செய்தால் கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் ஞாயிறு தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுகிழமைகளில் நாகராஜாவிற்கு பால் ஊற்றி வழிபடுவது புனிதமாக கருதபடுகிறது. அதிலும் ஆவணி ஞாயிற்றுகிழமை கோயிலில் வழிபாடு நடத்தினால் மிகவும் சிறப்பானதாக கருதபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் ஞாயிற்றுகிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த நிலையில் நேற்று இரண்டாவது ஆவணி ஞாயிற்றுகிழமை ஆகும். நாகராஜா கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்க பட்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடந்தது. மேலும் கோயில் சுற்று பிரகாரம் பகுதியில் உள்ள சிவன், பாலமுருகன், சாஸ்தா, உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில், பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வருகை புரிந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளா பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருமணம் கைகூடவும், குடும்ப கஷ்டங்கள் தீரவும் காணிக்கை செலுத்தி நாகராஜாவை வணங்கி சென்றனர். மேலும் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் விட்டும், மஞ்சள், உப்பு போன்றவை வாங்கி தங்கள் நேர்ச்சை கடன் செய்தனர். கோயிலின் அருகே மஞ்சள், உப்பு, பால் வியாபாரம் அதிக அளவில் நடந்தது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடும் செய்ய பட்டு இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar